நிலா ஒளி பரப்பும் நிலாவெளிக் கிராமத்தில் சைவ, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இம் மக்கள் ஒற்றுமையாகவும், சிறப்பாகவும் வாழ மும்மத இறை வழிபாடு நடைபெறுகின்றது.
அந்த வகையில் சைவசமய மக்கள் வழிபடும் ஆலயங்களாக நிலாவெளி முத்துமாரி அம்மன் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், பத்தினி அம்மன் ஆலயம், திருமுருகன் ஆலயம் என்பன விளங்குகின்றன.
முத்து மாரி அம்மன் ஆலயம்.
நிலாவெளி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் செவ்வாய் கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் விசேடமாகப் பூசைகள் நடைபெறுகின்றது.
சித்தி விநாயகர் ஆலயம்
சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒவ்வருநாளும் மூன்று காலப்பூசைகள் நடைபெறுகின்றது.
பத்தினி அம்மன் ஆலயம்
பத்தினி அம்மன் ஆலயத்தில் திங்கள் கிழமையும், வெள்ளிக்கிழமையும் பூசை நடைபெறுகின்றது.
கிறிஸ்தவ தேவாலயம்
இக்கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களின் வழிபாட்டுத்தலமாக இத்தேவாலயம் விளங்குகின்றது. இங்கு ஒவ்வரு ஞாற்றுக்கிழமைகளிலும் விசேட ஆராதனை நடைபெறுகின்றது.
பள்ளிவாசல்
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத்தலமாக விளங்கும் இப்பள்ளிவாசலில் ஒருநாளைக்கு 5 நேரத்தொழுகை இடம்பெறுகின்றது. விசேடமாக வெள்ளிக்கிழமைகளில் கொத்துவாத் தொழுகை நடைபெறுகின்றது.